எமது கிராமத்தின் தலைசிறந்த விளையாட்டுக்கழகங்களில் ஒன்றான திருவள்ளுவர் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த விளையாட்டுவிழாவானது 2016-04-09 அன்று பிற்பகல் 3 மணியளவில் கழகத்தலைவர் திரு வ.தயாகரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் அதிதிகளாக திரு M.கோபாலரெட்ணம்(பிரதேச செயலாளர் ,மண்முனை தென் எருவில் பற்று), திரு.P. குணரெட்னம் (வாழ்வின் எழுச்சித்திட்ட பணிப்பாளர்), வைத்தியகலாநிதி க.ஸ்ரீகாந்த்(ஆதார வைத்திய சாலை-கல்முனை) என பலர் கலந்து சிறப்பித்தனர்.
பாண்ட் வாத்தியம் முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசியக்கொடி,கழகக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இருபாலருக்குமான குறுந்தூர ஓட்டங்கள், வழுக்குமரமேறுதல், தலையணைச்சமர் , அலங்கார பானையுடைத்தல் போன்ற போட்டிகள் பார்வையாளர்களை சுவாரசியப்படுத்தியது.
அதிதிகள் உரையில் மைதான பிரச்சனை சற்று அலசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டில் மட்டுமல்லாது கல்வியிலும் சாதனைபடைத்த மாணவர்களுக்கு கேடயங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவித்தது சிறப்பம்சமாகும்.