கோட்டைக்கல்லாறு பிரண்ட்ஷிப் விளையாட்டுக்கழகத்தினரால் வருடாவருடம் சித்திரைப் புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக நடாத்தப்படும் மரதன் ஓட்டப்போட்டியானது இன்று 2016/04/14 காலை 8 மணியளவில் கழகத்தின் தலைவர் திரு செ.செல்வபதி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. 

அதிதிகளின் மங்கள விளக்கேற்றலின் பின்  ஆரம்பமான இம் மரதனோட்டமானது  எமது கிராமத்தை சுற்றி 3 சுற்றாக இடம்பெற்றது. சுமார் 50 இற்கும் மேற்பட்ட இளம்வீரர்கள் பங்குபற்றிய இம் மரதன் ஓட்டத்தில் 

முதலாம் இரண்டாம் மூண்றாம் இடங்களை முறையே  சுஜீத்,  ரீனுஷாந், திலிப் ஆகியோர் தட்டிச்சென்றனர்.














 
Top