எமது கிராமத்தின் பெயரின் காரணமாய் அமைந்த ஒல்லாந்தர் அமைக்க முற்பட்ட கோட்டையின் கிணற்றினுள் இயற்கை எழிலுடன்  இத்திமர நிழலில் கண்கண்ட தெய்வமாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரமருளும்   கோட்டைவாசல் ஸ்ரீ நாகதம்பிரானின்  வருடாந்த உற்சவமானது கடந்த 12.04.2016 அன்று ஆரம்பமாகி 14.04.2016  துர்முகி வருட முதலாம் நாளான நேற்று பிற்பகல் 7 மணியளவில் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் பூசையுடனும் எம்பெருமான் குடிகொண்டிருக்கும் கிணற்றினுள் பால் வைக்கும் நிகழ்வுடனும்  இனிதே நிறைவுற்றது.

உற்சவ தினங்களில் தினமும் இரவு பூசையும் அதனைத்தொடர்ந்து எம்பெருமான் குடிகொண்டிருக்கும் கிணற்றினுள் பால் வைக்கும் நிகழ்வும் பகல் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

















 
Top