“உயிர் காப்பான் தோழன்” என்பார்கள் இதற்கு ஒரு படி மேல் சென்று உயிரை காப்பவன் இறைவன் என்பார்கள்.

இவ்வாறு இந்த உலகத்தில் உள்ள மனித உயிர்களை காப்பாற்றுவதற்காக மனிதநேயம் கொண்ட மனிதர்கள் சிலரினால் மேற்கொள்ளப்படுகின்ற போற்றுதற்குறிய, மதிக்கப்படவேண்டிய இறைவனுக்கு ஒப்பான ஒரு செயல்தான்  இரத்ததானமாகும்.

இந்த இரத்ததானத்தின் ஊடாக உலகில் ஒரு நொடிப்பொழுதில் பல கோடிக்கணக்கான மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதாக கூறப்படுகின்றது.

இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு  நாளை 2016-04-17 காலை 8.30 மணியளவில் கோட்டைக்கல்லாறு  சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் இடம்பெற உள்ள  இரத்த தான முகாமில் உங்களின் பங்களிப்பை வழங்குமாறு வேண்டுகிறோம்.
 
Top