கடந்த 2016-0308 அன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் தேசிய கிரிக்கட் அணியில் இளைஞர்களை உள்வாங்கும் நோக்குடன் இடம்பெற்ற தெருவுச்சுற்றில் மாகாணரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த எமது கிராமத்து வீரன் சிவபாலன் அரவிந்த் அவர்கள்  12/03/2016 ம் திகதி காலியில் இடம்பெற்ற தேசியரீதியான இறுதிக்கட்ட தெரிவுப்போட்டியில் 3ம் இடத்தை பெற்றுள்ளார். இவர் கோட்டைக்கல்லாறு சுவாட்டி கழக வீரரும்  பெரியகல்லாறு (கடினபந்து)வளர்மதி கழக வீரரும் ஆவார்  இவரை தற்போது பல பிரசித்தி பெற்ற கழகங்கள் தமது கழகம் சார்பாக  விளையாடுமாறும் தாம் அதற்கான சம்பளத்தை வழங்குவதாகவும் தெரிவித்ததாகவும் அதற்கு அவர் தமது பயிற்சியாளர் மற்றும் பிரதேச விளையாட்டு அதிகாரியுடன் கலந்துரையாடி முடிவை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்  இவரை எமது இணையதளம் மனதார வாழ்த்துகின்றது. இறுதிக்கட்ட தெரிவில்  தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு  தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Top