எமது கிராமத்தை சேர்ந்த க.பொ.த உயர்தர வகுப்பு மாணவகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்திற்கு தற்போது பிரித்தானியாவில் வதியும் வைத்திய கலாநிதி சீ.நவரெட்ணம் அவர்களினால் அவரது தனிப்பட்ட அன்பளிப்பாக ரூபா 2 இலட்சம் வழங்கியுள்ளார்.
கல்விக்காக தொடர்ந்து பல ஒத்துழைப்பை நல்கும் வைத்திய கலாநிதி சீ.நவரெட்ணம் அவர்கட்கு கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.