கடந்த 2016.02.13 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான அம்பாரைவில்லானின் மாசிமகத் திருவிழாவின் 9ம் நாள் திருவிழாவான சப்பறத்திருவிழா 21.02.2016 அன்று மிக விமர்சையாக இடம்பெற்றது.
பிற்பகல் 6.30 மணியளவில் ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய விநாயகப்பெருமான் பஜனை கீதங்கள் இசைக்க,பாண்ட் வாத்தியம் முழங்க .சிறார்களின் நடனம் கண்களை கவர அடியார்களுக்கு அருள் பாலிக்க வீதிவலம் வரும் காட்சி அனைவரினதும் உள்ளத்தை கவர்ந்தது.
அதனைத்தொடந்து 22.02.2016 காலை சுவாமி கடற்குளிப்பிற்காக ஒந்தாச்சிமடம் ஊடாக எமது கிராமத்து கடற்கரையை அடைந்து அங்கு மகாமக தீர்தோற்சவம் இனிதே இடம்பெற்றது.