கிராமத்தின் மத்தியில் பிரதான வீதியருகே வீற்றிருந்து வேண்டுவோர்க்கு வேண்டும்  வரமளிக்கும் வேழமுகத்தோனின் மாசிமக தீர்த்தோற்சவத்தின்
கொடியேற்றத்திற்கான கொடிச் சீலை 2016.02.12 அன்று சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து பொதுமக்கள் பார்வையாக எடுத்துவரப்பட்டது .2016.02.13 சனிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ஆலயத்தில்  இடம்பெற்ற பூர்வாங்க கிரியைகளைத் தொடர்ந்து  ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சு.சுதர்ஷன் அவர்களால் கொடி ஏற்றிவைக்கப்பட்டு இவ்வாண்டிற்கான மாசிமக திருவிழா இனிதே ஆரம்பமானது






 
Top