கோட்டைக்கல்லாறு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த பொதுக்கூட்டமானது இன்று (2016.01.10) முற்பகல் 10.30 மணியளவில் ஆலய முன்றலில் தலைவர் ந.சிவகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு தனது தலைமையுரையில் கடந்த 2013.11.24 அன்று இவ் நிருவகசபை கூட்டப்பட்டு ஆலய பரிபாலனம் சிறப்பாக இடம்பெற்றது. இவ் ஆலயம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டபோது 350,000/= கடனுடன் காணப்பட்டது.
தற்போது அக் அக்கடன்கள் யாவும் ஈடுசெய்யப்பட்டு கையிருப்பாக சுமார் 80,000/- வரை உள்ளதாகவும் ,தான் இவ் ஆலயத்தை பொறுப்பேற்ற போது தனது நோக்கம் இக் கடனை நிவர்திசெய்வதில் இருந்ததாகவும் அதனால் பாரிய அளவிலான அளவில் அபிவிருத்திகளை தன்னால்
மேற்கொள்ளவில்லை இதனால் நிருவாக சபையுடன் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டது. இன்று அவர்கள் அதை புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும்
இன்னும் ஒரு வருட பதவிக்காலம் உள்ள நிலையிலும் தான் 2 வருடம் தலைவராக செயற்பட்டது மன நிறைவை தருவதாகவும் ஓர் புதிய நிருவாகம் இவ் ஆலயத்தை பொறுப்பேற்று சிறந்த முறையில் செயற்பட வேண்டும் . அதற்கு தான் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறினார்.
அதனைத்தொடர்ந்து சென்ற கூட்டத்திற்கான கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது . பின்னர் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு சபையோரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இவ் ஆலய நிருவாக கட்டமைப்பின் படி 17 அங்கத்தவர்கள் தெரிவு இடம்பெற்றது.முதலில்
செயலாளராக உமாபதிசிவம் அவர்களும்
தலைவராக கு. ஜெயக்காந்தன் அவர்களும்
பொருளாளராக அ. சுபதீபன் அவர்களும்
உபதலைவராக க.சோதீஸ்வரன் அவர்களும்
உப செயலாளராக அருள்குமார் அவர்களும்
ஆலோசகராக சிவசிவா அவர்களும்
கணக்காய்வாளராக விஸ்வராஜா அவர்களும்
அங்கத்தவர்களாக புருசோத்தமன்,இளங்கோவன்,நடேஸ்,தினுஷாந்,திவாகரன்,நவரெட்ணம்,
விநாயகமூர்த்தி,அனுஜன் ஆகியோரும் சபையோரினால் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் கு. ஜெயக்காந்தன் அவர்களிடம் ந.சிவகுமார் அவர்கள் ஆலய பொறுப்புக்களை ஒப்படைத்தார்.
இதன்பொழுது எமது ஆலயத்திற்கு ஓர் இராஜகோபுரம் ஒன்றை அமைத்துத் தருவதாக ஓர் சைவ அடியார் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அதற்கான அடிக்கல் நாட்டுநிகழ்வு கூடியவிரைவில் இடம்பெறும் எனவும் திரு க.சோதிஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.
இறுதியாக நன்றியுரை நிகழ்த்திய செயலாளர் உமாபதிசிவம் அவர்கள் ஆலய துப்பரவு பணிகளில் பொதுமக்கள் ஆகிய நாம் எமது சொந்த வேலையாக நினைத்து செயற்பட வேண்டும். விரதகாலம் மற்றும் திருவிழாக்களின் கணக்கறிக்கைகள் அவை இடம்பெற்று ஒரு வார காலத்துக்குள் பொதுமக்களின் பார்வைக்கு விடப்படும் எனவும் இந்து மகளீர் மன்றத்தின் சேவையையும் இதன்போது பாராட்டி தனது நன்றியுரையுடன் கூட்டத்தை நிறைவு செய்தார்.
கணக்கறிக்கை-2015