மண் மகிழ  26-03-1995                                                       கண் நெகிழ 01-01-2016

                                              செல்வன் பேரின்பராஜா பிரசாந்


கோட்டைக்கல்லாறு மண்ணின்
வித்தகனே!
தடந்தோள் கொண்ட உன்னை
தளர்த்திய-விதி எதுவோ?


தந்திரமாய் காலன் உன்னை
தனதாக்கிக் கொண்டானோ?
அல்லது
இறைதந்த கொடை என்று இலகுவாய்
ஏற்றாயோ ?


ஓட்டப்போட்டி என்றால்
நீயே! முதலிடம்
உதைபந்து என்றாலே
உனையடிக்க -ஆளில்லை


இருபதுக்குள்ளே
எல்லா இலக்குகளையும்
எய்து விட்டாய் என்று நினைத்து
இளைப்பாற போனாயோ?

ஐயோ!
உன்னை ஈன்றவளின் கதறலும்
தந்தையின் தவிப்பும்
பிறப்புகளின் -குமுறல்களும்
உறவுகளின்-அழுகுரலும்
எம் உள்ளங்களை
உருக்குதின்கே!


நீ இறையடி சேர்ந்ததை
எங்கள் மனம் இன்னும்
நம்பவில்லை

நிறைவான மரணம்
நின்மதியை தருமென்று
இயற்கையின் நியதியை
ஏற்றாயோ?

விழி முட்டும் கண்ணீருடன்-மனம்
விடை கொடுக்க  மறுக்கின்றது
உன் ஆத்மா சாந்தியடைய
வேண்டிநிற்கும்

பிரித்தானியா வாழ் கோட்டைக்கல்லாறு ஒன்றியம்  

 
Top