கோட்டைக்கல்லாறு இன்போ வின் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்

தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயனம் என்றும்; ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தக்ஷிணாயனம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல் தேதியை தைப்பொங்கல் என்றும் மகர சங்கராந்தி என்றும் கொண்டாடுகிறோம். தை மாத முதல் நாளில் சூரியன் வடக்கு நோக்கித் திரும்பி சஞ்சரிக்கத் தொடங்குவதால் இதற்கு உத்தர அயனம் என்று பெயர். அன்று சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பார்.

சூரிய வழிபாடு செய்ய தை முதல் நாள் உகந்த நாளாகும். எனவேதான் அன்று இக்கடவுளுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம். சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாதவையே இல்லை. 
 
Top