மலரும் முகம் பார்க்கும் காலம் கவிதையின் இருபத்தாறாவது கவிதையை எழுதியவர் ஜேர்மனியைச் சேர்ந்து படைப்பாளி திரு.ஏலையா க.முருகதாசன்
'மலரும் முகம் பார்க்கும் காலம்'
கவிதை:26 எழுதியவர்: ஏலையா க.முருகதாசன்
கவிதை:26 எழுதியவர்: ஏலையா க.முருகதாசன்

மடிந்தவர் மடிந்தும் வாழ்வர் என்றென்றும்
மரபணுக்கள் தொடர்தலில் வாழையடி வாழையென
உயிர்ப்பிறப்புக்கள் ஆண் பெண் உயிரணுக்கள் உறவினில்
கருவென உருவெடுக்கையில் உருக்கொடுத்த அன்னை தந்தை
மகிழ்ந்துமனம் குதூகலித்தவர்கள் மகிழ்ந்திடுவர்
நாட்களை எண்ணி காத்திருக்கையில் உதிரம் தோயந்தொரு சிசு
அன்னை உதரம் விட்டேகி பூமியதனை நோக்கி வருiகையில்
இவ்வுலகு மகிழ்வெல்லாம் எமக்கே என பெற்றவர்கள் காற்றில் மிதக்க
சிசு குழந்தையாகி தவழ்ந்து விழுத்தெழும்பி நடக்கையில்
இதுவெல்லோ மலரும் முகம் பார்க்கும் காலம் என சிலிப்பர்
பலபருவம் தாண்டி உணர்வுகள் வேதியல் மாற்றம்கொள்
உணர்ச்சிகள் தேங்கியே விம்மியெழும் உடல் வளர்ச்சி
கண்டு தந்தை தாய் பூரிப்பர் கல்வியில் மேல் நிலை
சமூகத்தில் தன்பிள்ளை போற்றப்படுகையிலும் ஆனந்தம் கொள்வர்
வளர்ந்த பிள்ளை தன்னிலை உணர்ந்தே தனக்கொரு வாழ்வுக்காய்;
உணர்கையில் பிள்ளைகளின் உள உடல் தேவைக்காய்
திருமண பந்தம் தேவையெனத் தேடியே துணை தேடிக் கொடுக்கையில்
திருமணம் கண்டு தொடரும் தொடுகையிலும் உயிரணுக்களின்
உறவினில் உருவாகும் கருவொனறு உதரத்தில் தங்கிடுகையில்
தொடர்ந்திடுமே பிறப்பு தொடராகி தொடர்கதையாய்
மரபணுக்கள் தொடர்தலில் வாழையடி வாழையென
உயிர்ப்பிறப்புக்கள் ஆண் பெண் உயிரணுக்கள் உறவினில்
கருவென உருவெடுக்கையில் உருக்கொடுத்த அன்னை தந்தை
மகிழ்ந்துமனம் குதூகலித்தவர்கள் மகிழ்ந்திடுவர்
நாட்களை எண்ணி காத்திருக்கையில் உதிரம் தோயந்தொரு சிசு
அன்னை உதரம் விட்டேகி பூமியதனை நோக்கி வருiகையில்
இவ்வுலகு மகிழ்வெல்லாம் எமக்கே என பெற்றவர்கள் காற்றில் மிதக்க
சிசு குழந்தையாகி தவழ்ந்து விழுத்தெழும்பி நடக்கையில்
இதுவெல்லோ மலரும் முகம் பார்க்கும் காலம் என சிலிப்பர்
பலபருவம் தாண்டி உணர்வுகள் வேதியல் மாற்றம்கொள்
உணர்ச்சிகள் தேங்கியே விம்மியெழும் உடல் வளர்ச்சி
கண்டு தந்தை தாய் பூரிப்பர் கல்வியில் மேல் நிலை
சமூகத்தில் தன்பிள்ளை போற்றப்படுகையிலும் ஆனந்தம் கொள்வர்
வளர்ந்த பிள்ளை தன்னிலை உணர்ந்தே தனக்கொரு வாழ்வுக்காய்;
உணர்கையில் பிள்ளைகளின் உள உடல் தேவைக்காய்
திருமண பந்தம் தேவையெனத் தேடியே துணை தேடிக் கொடுக்கையில்
திருமணம் கண்டு தொடரும் தொடுகையிலும் உயிரணுக்களின்
உறவினில் உருவாகும் கருவொனறு உதரத்தில் தங்கிடுகையில்
தொடர்ந்திடுமே பிறப்பு தொடராகி தொடர்கதையாய்