கோட்டைக்கல்லாறு புற்றடி ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது கடந்த 22.11.2015 ஞாயிற்றுக்கிழமை காலை யாக பூசை கும்பபூசை அலங்காரபூசையுடன் ஆரம்பமாகி 23.11.2015 திங்கட்கிழமை பிற்பகல் சுவாமி ஊர் வீதி வலம்வருதலும் இடம்பெற்று நேற்று (2015.11.24) காலை அஸ்டோத்திர சங்காபிசேகமும் அதனைத்தொடர்ந்து நாகலிங்கேஸ்வரரின் அலங்கார பூசையும் இடம்பெற்றது.
இரவு 11 மணியளவில் ஆரம்பமான பொங்கல் பூசையுடன் நாகலிங்கேஸ்வர பெருமானின் இவ் ஆண்டிற்கான அலங்கார உற்சவம் இனிதே நிறைவுற்றது.