யாழ் பூங்குடுதீவில் இடம்பெற்ற வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து 2015-05-24 இன்று காலை 9 மணியளவில்  கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு பொதுமக்கள் இணைந்து கவன ஈர்ப்புப்போராட்டத்தை நடாத்தினர். கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம் முன்பாக ஆரம்பமான போராட்டம் பேரணியாக பெரிய கல்லாறு பாலத்தை நோக்கி நகர்ந்து பெரியகல்லாறு பொதுமக்களுடன் இணைந்து பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களுடன் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது   இங்கு  பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா ,மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட  பொதுமக்கள் கலந்து கொண்டனர். இங்கு உரை உரையாற்றுகையில் போதை பொருள் பாவனை, ஆன்மீக விழிப்புணர்வு இன்மையே மக்களிடையே இவ்வாறான கோர சம்பவங்களுக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். 















 
Top