அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தீர்தோற்சவம்-2014கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்காரஉற்சவமானது கடந்த 31.08.2014 அன்று ஆரம்பமானதை தொடர்ந்து இறுதி நாளாகிய இன்று (13.09.2014) தீர்தோற்சவம் இடம்பெற்றது.காலை 7 மணியளவில் விநாயகப் பெருமானின் அலங்கார பூசையுடன் பொற்சுண்ணம் இடித்தலுடன் அலங்கரிக்கப்பட்ட உழவுஇயந்திரத்தில் சுவாமியின் திருவீதிலாவும் இடம்பெற்றது.இதன்போது பக்த அடியார்கள் தங்கள் வாசலில் நிறைகுடங்களை வைத்து பெருமானை வழிபட்டனர்,அதனைத் தொடர்ந்து மு.ப 11 மணி சுப முகூர்த்த வேளையில் ஆலையடி தீர்த்தத்துறையில் எம்பெருமான் தீர்த்தமாடியதுடன் ஆலயத்தில் பொன்னூஞ்சல் ஆடும் நிகழ்வுடன் இவ்வருட அலங்கார உற்சவம் இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டு விநாயகப்பெருமானின் அருள் பெற்றேகினர்.