அண்மையில் எமது கிராமத்திலுள்ள  4 முன்பள்ளிகளை சேர்ந்த 160 பிள்ளைகளின் ஆரம்ப கல்வி செயற்ப்பாட்டினை  திறன்பட முன்னெடுக்கும் பொருட்டு எமது கிராமத்தை சேர்ந்தவரும்  எமது  கிராமத்தின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவரும் தற்போது  அவுஸ்திரேலியா  நாட்டில் வசிப்பவருமான   கிருஷ்ணபிள்ளை (ஓடாவி அண்ணாச்சி) அவர்கள்  400 புத்தகங்களை அவுஸ்திரேலியா வில் இருந்து வழங்கியுள்ளார். அன்னாரை எமது இணையதளம் சார்பில் மனமார்ந்த  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் ,  மேலும் கடந்த வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த 66  மாணவர்கட்கு  அன்னாரினால்  இவ்வருட ஆரம்பத்தில்  ஊக்குவிப்புத்தொகை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
Top