தமிழ் கூறும் இவ்வுலகு எங்கும் பரந்து வாழும் படைப்பாளிகளுக்கு, அவர்தம் படைப்புக்களை பிரசுரிக்க உதவி, அதற்கூடாக அவர்களின் ஆற்றல்களை சமூகத்தில் வெளிப்படுத்தி, அவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதே படைப்பாளிகள் உலகின் நோக்கம்.
அச் சீரிய சிந்தனைகொண்ட திரு.ஐங்கரன் கதிர்காமநாதன் அவர்கள் அண்மையில் எமது கிராமத்து பொது நூலகத்திற்கு வருகைத்தந்த போது தங்களின் அமைப்பால் வெளியிடப்பட்ட ஒருதொகை நூல்களையும் கிராமிய இசைத்தொகுப்படங்கிய DVD களையும் எமது நூலகத்தலைவர் திரு சிவானந்தராஜா அவர்களிடம் கையளித்தார்.