ஓலைக்குடிசையில் பிரதான வீதியருகே அமர்ந்து அருள் பாலித்த கோட்டைக்கல்லாறு ஸ்ரீ அம்பாறை வில்லானின் ஆலயம் படிப்படியாக வளர்ச்சி கண்டு தற்பொழுது வில்லாலனின் அருளாசியுடனும் கட்டடக்கலைஞர் திரு.க.கனகசபை அவர்களின் உபயத்துடனும் 3 தளங்களை கொண்ட இராஜகோபுரத்துடன் கம்பீரமாக மிளிர்வதர்கான அடிக்கல் நாட்டு விழாவானது இன்று (2016.01.27) காலை 9.30 மணியளவில் ஆலயத்தில் இடம்பெற்றது.
நிகழ்வானது சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்களின் அருளாசியுடன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சு.சுதர்சன் குருக்கள் அவர்களினால் பூர்வாங்க கிரியைகள் நடாத்தப்பட்டு அடிக்கல் நாட்டுவிழா பெருந்திரளான பக்த அடியார்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது.