சற்று முன்(2015.09.29, 4.30PM) கோட்டைக்கல்லாறு கண்ணகி வித்தியாலயத்திற்கு அருகில் இடம் பெற்ற வீதி விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் பெரியகல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ் விபத்து சம்பவித்ததாகவும் விபத்து நிகழ காரணம் எல்லை மீறிய வேகம் எனவும் தெரிய வருகிறது.