கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ அம்பரைவில் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 5ம் நாள் திருவிழாவினை கோட்டைக்கல்லாற்றை சேர்ந்த அமரத்துவம் அடைந்த செல்லையா செல்லத்தங்கம் நினைவாக மகள் மல்லிகா குடும்பத்தினர் மிகவும் விமர்சையான முறையில் செய்து முடித்தனர். இன்று ஆலயத்தில் விசேட நிகழ்வாக ''கைலாய நாதர் ஆன்மிகம்'' எனும் விசேட ஆன்மீக விளக்க நிகழ்ச்சி பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும் தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாய தரிசனம் கண்ட திருவாளர் த.உதயராஜா அவர்களினால் ஒலி,ஒளி தொகுப்புடன் கூடிய விளக்க உரை இடம்பெற்றது. இன் நிகழ்வுகளில் திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டு அம்பாறை வில்லானின் அருள் வேண்டிநின்றதுடன் ஆலயத்தில் அழகிய ஆண் குழந்தை ஒன்றும் விற்று வாங்கும் வைபவமும் இடம்பெற்றது.




























 






 
Top