(அனித்) கடத்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக பாதிக்கப்பட்டு தற்போது உறவினர் வீடுகளிலும் தற்காலிக முகாமிலும்(கோ.க.ம.வி) தங்கியுள்ள எமது கிராமத்து மக்களை இன்று(2014.12.27) பிற்பகல் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பொன்.செல்வராஜா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.இது வரை 200 குடும்பங்கள் வரை வெள்ளத்தால் பாதிக்கப்படுள்ளதாகவும் அவர்களுக்கு வேண்டிய சமைத்த உணவுகள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கிராம உத்தியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.