இம்முறை நடைபெற்ற ஆங்கில மொழி மூல எழுத்தாக்க (creative writing) போட்டியில், கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் தரம்7 இல் கல்விபயிலும் எமது கிராமத்தை சேர்ந்த மாணவியான மதிவண்ணன் சுமேதா தேசிய மட்டத்தில் 2ம் இடத்தை பெற்று எமது கிராமத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.இவர் கோபாலபிள்ளை மதிவண்ணன்(மோட்டர் வாகனபோக்குவரத்து பரிசோதகர்-யாழ்பாணம்) , சிவமித்திரா(தாதியுத்தியோகஸ்த்தர்) ஆகியோரின் புதல்வியாவர். இவரை பாடசாலை சமூகத்துடன் எமது இணைய குழுமமும் மனதார பாராட்டுகின்றது.







 
Top