பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணியானது இன்று கோட்டைக்கல்லாறு மேற்கு பல்தேவை கட்டடத்தில் கிராமசேவை உத்தியோகஸ்தர்கள்,சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் மாதர் சங்க உறுப்பினர்கள் வழிநடாத்தலுடன் இன்று இடம்பெற்றது.இதில் எமது கிராமத்தை சேர்ந்த பலர் தங்களால் இயன்ற உலர்உணவுப்பொருட்கள்,உடுதுணிகள் உள்ளிட்ட பல பொருட்களை ஆவலுடன் வழங்கியதை காணக்கூடியதாக இருந்தது. இதன்போது இப்பணியை தலைமையேற்று நடாத்திக்கொண்டிருக்கும் திரு ருத்ராகணேசன் (கிராமசேவை உத்தியோகஸ்தர்) அவர்கள் நாளையும் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணிதொடரும் எனவும், இப்பணியில் பங்கெடுத்த மக்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதகாவும்,இப்பொருட்கள் பாதிகப்பட்ட மக்களுக்கு துரிதமாக கொண்டு சேர்க்கப்படும் எனவும் உறுதியளித்தார்.