கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தில் சுமார் 40 வருடங்களிட்கு பின்னர் முருகப் பெருமானின் திருக்கல்யாணமும் பொன்உஞ்சல் ஆட்டும் வைபமும் நேற்று (30-10-2014)அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. பி .ப 6 மணியளவில் ஆரம்பமாகிய இன் நிகழ்வானது திருக் கல்யாண நிகழ்வு முடிவடைந்ததும் சுவாமி உள்வீதி வலம்வந்தார். அதனை தொடர்ந்து பொன்உஞ்சல் ஆட்டும் வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது .இதன்போது பல பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.