பன்னெடுங்கால வரலாற்றை கொண்டதும் கண்கண்ட தெய்வமுமாக விளங்கும் கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ  கோட்டைவாசல் நாகதம்பிரான் ஆலயத்தின் கிழக்கு புறமானது வெள்ளப்பெருக்கின் போது மண் அரிப்புக்கு உள்ளாகுவது யாவரும் அறிந்ததே.இப்பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்பணையானது 2004 ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது முற்றாக அழிவடைந்தது. இவ்வாலயத்திற்கு புதிதாக ஓர் தடுப்பணை ஒன்றினை நிர்மாணிக்கும் பொருட்டு கட்டார் நாட்டில் தொழில் புரியும் எமது கிராமத்து இளைஞர்களின் முயற்சியால் தாங்களால் இயன்ற நிதிப்பங்களிப்புடன் இத்தடுப்பணைக்கான ஆரம்பக்கட்ட பணிகள் கடந்த 2014.08.31 அன்று  ஆரம்பமானது.இவ்வாலயத்தின் தடுப்பணைக்காக நிதியுதவி வழங்க முன்வருவோர் எமது  இணைய தளத்தை தொடர்பு கொள்ளவும்.அல்லது முகப்புத்தக கருத்துப்பெட்டியில் (FACEBOOK COMMENT BOX) உங்கள் தகவல்களை பதியவும்.












 
Top